சிவராசன் கூறியதைக் கேட்ட சிவசோதியின் மனம் கொதித்தது.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?
சும்மா கிடந்தவனை வலிய அழைத்து விருந்து கொடுத்து மனதை மாற்றி,
அதில் ஆயிரமாயிரம் ஆசைகளை விதைத்துவிட்டு, திடீரென்று எப்படி இவர்களால் தூக்கி எறிய
முடிந்தது?!
பாம்பு செட்டையைக் கழற்றிவிடுவதுபோல எப்படித்தான் இவர்களால் மனித
உறவுகளை மாற்றியமைக்க முடிகிறது? மனச்சாட்சியை அடகுவைத்து ஆதாயம் தேடும் பச்சோந்திகள்.
எவ்வளவு ஆசையோடு வந்தான். எவ்வளவு கற்பனைகளைச் சுமந்து கொண்டு வந்தான்.
அத்தனையையும் கசக்கிப் பிழிந்து அவனைச் சக்கையாக எறிய அவர்களால் எப்படித்தான் முடிந்தது?!
காரின் பின் ’சீற்’றில்
அவன் அகல்யாவுக்காக ஆசையோடு வாங்கிய சட்டை அனாதையாக அலங்கோலமாகக் கிடந்தது.