சில நினைவுகள் செத்தாலும் போகாதோண்ட மாதிரி மனசோடையே ஒட்டிக் கொண்டிருக்கும். அப்பிடித்தான் இதுவும்…
ஆறாம் வகுப்பெண்டு நினைக்கிறன்.. வேறை ஒரு பள்ளிக்கூடத்திலை இருந்து அங்க படிக்க வந்திருக்க வேணும்.. அதுவும் சரியா நினைவிலை இல்லாட்டிலும் நான் சொல்ல வாற முக்கியமான விசயம் நல்லா ஞாபகத்தில இருக்கு.
ஆறாம் வகுப்பெண்டு நினைக்கிறன்.. வேறை ஒரு பள்ளிக்கூடத்திலை இருந்து அங்க படிக்க வந்திருக்க வேணும்.. அதுவும் சரியா நினைவிலை இல்லாட்டிலும் நான் சொல்ல வாற முக்கியமான விசயம் நல்லா ஞாபகத்தில இருக்கு.
எங்கள் ரண்டு பேருக்கும் இடையில அப்பிடி ஒரு சினேகிதம்… பள்ளிக்கூடம் விட்டால் நான் அவன்ர வீட்டை போறது.. அவன் என்ர வீட்டை வாறது.. உரிமையோடை சாப்பிடுறது… எங்கள் ரண்டு பேற்றை அம்மாமாரும் அப்பிடித்தான்.. அப்பிடி ஒரு அன்பான உபசரிப்பு..