புதன், 18 நவம்பர், 2015

நட்பு - நினைவுத்துளி 02

சில நினைவுகள் செத்தாலும் போகாதோண்ட மாதிரி மனசோடையே ஒட்டிக் கொண்டிருக்கும். அப்பிடித்தான் இதுவும்…
ஆறாம் வகுப்பெண்டு நினைக்கிறன்.. வேறை ஒரு பள்ளிக்கூடத்திலை இருந்து அங்க படிக்க வந்திருக்க வேணும்.. அதுவும் சரியா நினைவிலை இல்லாட்டிலும் நான் சொல்ல வாற முக்கியமான விசயம் நல்லா ஞாபகத்தில இருக்கு.
எங்கள் ரண்டு பேருக்கும் இடையில அப்பிடி ஒரு சினேகிதம்… பள்ளிக்கூடம் விட்டால் நான் அவன்ர வீட்டை போறது.. அவன் என்ர வீட்டை வாறது.. உரிமையோடை சாப்பிடுறது… எங்கள் ரண்டு பேற்றை அம்மாமாரும் அப்பிடித்தான்.. அப்பிடி ஒரு அன்பான உபசரிப்பு..

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி

ங்கடை வீட்டிலை முந்தி ஒரு பழைய சிங்கர் மிசின் கிடந்தது.
முந்தி எண்டால்.. எழுபதுக்கு முந்தியாய்த்தான் இருக்க வேணும்.
ஏனெண்டால் கன விசயங்கள் ஞாபகத்திலை இல்லை எண்டாலும்.. நான் சொல்ல வாற விசயம் நடக்கேக்கை எனக்கு பத்து வயசும் ஆயிருக்கேலை எண்டதுமட்டும் நல்லாய் ஞாபகத்திலை இருக்கு.
இந்த சிங்கர் மிசின் எப்பிடி வந்ததெண்டு தெரியேலை.. ஆனால் எங்கடை வீட்டிலைதான் கிடந்தது. கீழ இருந்துதான் தைக்கிறது. அம்மா தனக்கு