ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆரம்பம்

வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டதுபோன்ற பிரமை சந்திரனை விழுங்கிய அமாவாசைகளாய் பௌர்ணமியை உதறித் தள்ளிவிடும்போல் இருந்தது. விதியின் கொடியகரங்கள் எந்த உருவத்தில் எதைச்செய்யும் என்று எவருக்குத் தெரியும்?அந்த வரிசையில் பரிமளா விதியின் வஞ்சகத்திற்கு இரையாகிவிட்டாள்.

அடிவயிற்றில் ஏதோ ஒரு பிரளயம். இன்னும் சிறிதுநேரத்தில் பிரளயம் எரிமலையாகிச் சுவாசக்குழாய்கள் வழியாகக்

ஞாயிறு, 10 மார்ச், 2013

அவரும் இவரும்..!

ந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன்.

தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார்.

புதன், 6 மார்ச், 2013

அந்தப் பக்கம் பாக்காதை!

''அந்தப் பக்கம் பாக்காதை..."
அவசரமாகக் கூறினான் மகேந்திரன்.

எந்தப்பக்கம் பார்க்க வேண்டாம் என்கிறான்?! பார்க்க வேண்டாமென்றால் பார்க்கத் துடிப்பதும், கேட்கக் கூடாதென்றால் கேட்க முயல்வதும், பேசத் தடை என்றால் பேச விளைவதும்தானே மனித இயல்பு?!

நானும் சாதாரண மனிதன்தானே? பார்க்கத் துடித்தேன். உடனே பார்த்தால், தனது வார்த்தையை மதிக்கவில்லையே என மகேந்திரன் மனதுக்குள் மறுகலாம். அதனால் வேறு திசையில் நோக்க ஆரம்பித்து, அப்படியே அரை வட்டவடிவமாக விழிகளை மெதுவாக அசைத்து அவன் குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கலாம் என்றொரு குறும்புத்தி எண்ணம் சிந்தையில் குறும்பாகச் சிரித்தது.