வியாழன், 25 அக்டோபர், 2012

அன்பின் அளவு

(1991ம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர் ஒருவரின் தற்கொலை இக் கதையின் கருவாகிறது.)

மாயவன் ஜேர்மனிக்கு வந்து ஐந்தாறு வருடங்களாகிவிட்டன. என்னென்ன கற்பனைகளுடன், திட்டங்களுடன் ஜேர்மன் மண்ணை மிதித்தானோ தெரியாது. இன்று பிணமாகக் கிடக்கிறான். சுற்றிலும் நண்பர்களின் கவலை தோய்ந்த முகங்கள். ஒரு சிலர் வெளிப்படையாகவே அழுதார்கள்.

மாயவனா தற்கொலை செய்தான்? என்ற நம்பமுடியாத விசாரணைகள். அவனுக்கு அப்படி என்ன குறை? என்று விடைதேடும் வினாக்கள்.

மாயவனுக்கு இருபத்தைந்து வயதளவில்தான் இருக்கும். தாய் தகப்பன், சகோதரிகள்

இதற்காக இவைகளை..!!

"செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?"

"உனக்கு வேறை கதையே இல்லையே.... எப்ப பார்த்தாலும் ஆடு மடிவிட்டூட்டுதே.... நாய் குட்டி போட்டூட்டுதே.... மாட்டிலை எத்தினை போத்தில் பால் கறக்கிறியள் எண்ட கதைதான்" என்று சலிப்புடன் கூறினார் செல்லமக்கா.

"செல்லமக்கா.... வீட்டிலை என்னவாலும் பிரச்சினை கிரச்சினையே? சள்புள்ளெண்டு விழூறியள். நாய் குட்டிபோட்டால் கவனமாய்ப் பாருங்கோ.... பிறக்கிற குட்டியளிலை ஒண்டுக்கு வீரன் எண்டு பேர் வையுங்கோ...."

புதன், 24 அக்டோபர், 2012

நான் தேடிப் பார்க்கிறேன்!

சிரட்டைக் கரிப்பொட்டு நெற்றியை மறைக்க
கள்ளங் கபடமில்லாக் குண்டுமணி விழிகளுடன்

தேசம் கடந்த பின்...!!!

லங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால், "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழிக்கேற்ப பொருள் வளத்துக்காகவும் கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து வேறுநாடுகளுக்குச் சென்றவர்களையும், அங்கே சென்றவர்களில் ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளிலேயே தமது வாழ்க்கையை நிரந்தரமாக்கியதையும், மறுபகுதியினர் சென்ற நோக்கத்தில் திருப்தியுற்றவர்களாக மீண்டும் தாயகத்திற்கு வந்து வசதியாகவும்,

திங்கள், 8 அக்டோபர், 2012

எனக்கென ஒரு வட்டம்

கதி முகாம். பலதரப்பட்ட நாட்டவர்களின் பலவிதமான குணாதிசயங்கள் சங்கமித்துச் சரசமாடும் அல்லது சண்டையிடும் வசந்தமாளிகை.

சங்கர் ஒரு வித்தியாசமான பாத்திரம். மதுவும் கையுமாக எந்நேரமும் புலம்புவதிலேயே அவனது நாட்கள் கரைந்து கொண்டிருந்தன. காரணம் காதல். காதலருக்குச் சாதி ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. பெற்றோருக்குத் தெரிந்தது. ஊரில் இருந்தால் கெட்டுவிடுவான் என்று ஜேர்மனிக்கு அனுப்பிவிட்டார்கள்.

வியாழன், 4 அக்டோபர், 2012

மாற்றம்

பாக்கியம் பெருமூச்செறிந்தாள்.

அவள் வாழ்க்கையை வாழ்வதற்காக ஏதாவதொரு துரும்பு கிடைக்கும், கிடைக்கும் என்று எதிர்பார்த்து எல்லாமே ஏமாற்றங்களாகிவிட்டன.

'இனி எப்படி வாழப்போகிறோம்?' என்ற கேள்வியே திரும்பத் திரும்ப அவளின் மனதில்....

புதன், 3 அக்டோபர், 2012

பாதிப்பு

சூரியனுக்கு என்னதான் குதூகலமோ? மிகவும் கடூரமாகச் சூட்டை வெய்யிலுடன் கலந்துவிட்டிருந்தான் ஸ்ரீலங்கா அரசு தமிழீழத்தில் பொருளாதாரத் தடையுடன் விமானத் தாக்குதலை நடாத்துவதுபோல. ஒருவருக்குச் சந்தோசமானபோது மற்றொருவர் கஸ்டப்படுவது இயற்கைதானே?!

எப்படியாவது கொதிக்கும் வெய்யிலில் கால் உழையக் காத்து நின்றாவது அரிசியை வாங்கிக்கொண்டுதான் போகவேண்டும் என்ற உறுதியுடன் அந்த மக்கள் கையில் வியர்வையால் பிசுபிசுக்கும் கசங்கிப்போன