புதன், 23 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (13)

திக்பிரமை பிடித்தவன்போல் நின்றான் சிவராசன்.
உறவென்ற ஆத்மாக்களின் மாற்றீடுகள் கைக்குக் கிட்ட வந்து எட்டச் செல்லும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஏன் விலகிக்கொள்ள ஆசைப்பட்டாய் அகல்யா? ஏன் வெறுத்துப் போனாய் இப்படி? வெட்டொன்று துண்டு இரண்டாய் என் உறவைத் தறித்துக்கொள்ள எப்படி முடிந்தது

செவ்வாய், 22 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (12)

சிவராசன் கூறியதைக் கேட்ட சிவசோதியின் மனம் கொதித்தது.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?
சும்மா கிடந்தவனை வலிய அழைத்து விருந்து கொடுத்து மனதை மாற்றி, அதில் ஆயிரமாயிரம் ஆசைகளை விதைத்துவிட்டு, திடீரென்று எப்படி இவர்களால் தூக்கி எறிய முடிந்தது?!
பாம்பு செட்டையைக் கழற்றிவிடுவதுபோல எப்படித்தான் இவர்களால் மனித உறவுகளை மாற்றியமைக்க முடிகிறது? மனச்சாட்சியை அடகுவைத்து ஆதாயம் தேடும் பச்சோந்திகள்.
எவ்வளவு ஆசையோடு வந்தான். எவ்வளவு கற்பனைகளைச் சுமந்து கொண்டு வந்தான். அத்தனையையும் கசக்கிப் பிழிந்து அவனைச் சக்கையாக எறிய அவர்களால் எப்படித்தான் முடிந்தது?!
காரின் பின் சீற்’றில் அவன் அகல்யாவுக்காக ஆசையோடு வாங்கிய சட்டை அனாதையாக அலங்கோலமாகக் கிடந்தது.

திங்கள், 21 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (11)

''அகல்யா வந்துவிட்டாள்!"
பவளம் ரெலிபோனில் கூறினாள்.
'என் அகல்யா வந்துவிட்டாள்!
சந்தோசத்தில் கூவவேண்டும் போலிருந்தது.
எண்ணாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருந்து எனக்காக, என் உறவுக்காக ஒரு உயிர் பறந்து வந்திருக்கின்றது.
'இதோ வந்துவிட்டேன் அகல்யா...! இனிமேல் என்னால் உன்னைக் காணாமல் இருக்க முடியாது. உன்னைக் காணாத கண்ணும்

சனி, 19 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (10)

ன்பின் சிவா!
உங்களுக்கு எதை எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. ரெலிபோனில், ஏதாவது எழுதச் சொன்னீர்கள். நானும் எழுதுவதாகச் சொல்லிவிட்டேன்.
எழுத உட்கார்ந்தால் என்ன எழுதப் போகிறோம் என்பதே மறந்துவிடுகிறது. எழுதுவதற்கு முன்னால் எழுந்த கற்பனைகள், எண்ணங்கள் யாவும் பேனையைக் கையில் எடுத்ததும் வெறுமையாய் வெண்மையாய் மறைந்து போகின்றன. எனினும் எழுத வேண்டும்.
இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். என்னில் எரிச்சலாகக்கூட வரும்.
சிவா! கொழும்புக்கு வந்ததிலிருந்து மனது அமைதியற்ற கடலைப்போல் அலைபாய ஆரம்பித்துவிட்டது. முதன்முதலில் ரெலிபோனில் உங்களின் குரலைக் கேட்டவுடனேயே என் சுயசிந்தனைகள் யாவும் மட்டுப்பட்டுவிட்டன. மறுநாள் கதைத்தபோது

வெள்ளி, 18 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (9)

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளிலேயே தீர்மானிக்கிறார்கள்.
இது சாத்தியமா? முடியுமா?
எப்படி? எப்படி?
வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பெயர்.
வந்து பத்து வருடங்களுக்கு மேல். கையில் காசில்லை. வரவிற்கு மேல் செலவு. பலரிடம் கடன்.
சொன்னால் நம்பமாட்டார்கள். பொய் என்பார்கள்.
எல்லோரும் பிளேன் ரிக்கற்றுடனும் சில நூறு டொலர்களுடனும்தான் வந்தார்கள். சோசல் காசில்தான் வாழ ஆரம்பித்தார்கள். கார் வாங்கி ஓடுகிறார்கள். பவுண் பவுணாக வாங்கி

வியாழன், 17 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (8)

விண்ணை எட்டிப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் அந்த வீதியில் வரிசையாக நின்றன.
ஒரு கட்டிடத்தில் குறைந்தது ஐம்பது வீடுகளாவது இருக்கலாம். கையிலிருந்த விலாசச் சீட்டில் வீட்டிலக்கத்தைச் சரிபார்த்தான்.
நூற்றியொன்று.
வாசற்கதவில் வரிசையாகப் பொருத்திய பெயர்ப் பொத்தான்களில் பெயரைத் தேடினான்.

'சிவநேசன்.

புதன், 16 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (7)

''நான் போவிட்டு வாறன். லீவு கிடைச்சால் மறுபடியும் வாறன்" என்று சிவராசனிடம் விடைபெற்றான் சண்முகநாதன்.

பாபுவும் சண்முகநாதனும் காரில் ஏறி அமர்ந்தார்கள். பாபு காரைச் செலுத்த ஆரம்பித்தான்.

“என்ன சண்! திட்டமெல்லாம் வெற்றியாக்கும்.'
 மர்மச் சிரிப்புடன் கேட்டான் பாபு.
''வெற்றிதான் பாபு. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனானாம். அந்தக் கதைதான் இது."

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (6)

டாக்டர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.
சோதனைக் குழாய்களில் இரத்தம் எடுத் தார்கள். எக்ஸ்ரேப் படங்களாக எடுத்துக் குவித்தார்கள். அவனைச் சுற்றிக் கூட்டம் கூட்டமாக நின்று பேசினார்கள்.
’ஏதோ சூட்டால் இரத்த வாந்தி எடுத்திருக்கலாம்!’ என்று நினைத்தவனுக்கு, மனதில் பயம் இலேசாக எட்டிப் பார்த்தது.
ஆஸ்பத்திரிக்கு வந்து இரண்டு வாரங்களாகிவிட்டன.

திங்கள், 14 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (5)

1989ம் ஆண்டு.
சிவராசன் ஜேர்மனிக்கு வந்து ஐந்து வருடங்கள் இருக்கும்.
சோசலில்தான் இருந்தான். களவாக ஒரு சீனா ரெஸ்ரோரண்டில் வேலை.
காலை ஐந்து மணித்தியாலம். பின்னர் மாலை ஐந்து மணித்தியாலம்.
கிழமையில் ஒரு நாள்தான் விடுமுறை.
பாவித்து அசுத்தமான உடைகளைத் தோய்த்து, அறையைச் சுத்தமாக்கி, சமைத்துச் சாப்பிட்டு

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (4)

''கேசவன்! கொழும்புக்கு ஒருக்கா ரெலிபோன் எடுக்க வேணும். அப்பா வந்து நிக்கிறார்."
"உன்ரை ரெலிபோனுக்கு என்ன நடந்தது? காசு கட்டேல்லையே?"
"இவன் தம்பியின்ரை அலுவலாய் கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் மாறிமாறிக் கதைச்சதிலை எக்கச்சக்கமாய் பில் ஏறீத்து."
"இப்ப தம்பி எங்கை? கனடாவுக்குப் போவிட்டாரோ?"
"எங்கை போனான்? கனடாவுக்கு அனுப்புறன் எண்டு சிங்கப்பூருக்குக் கூட்டிக் கொண்டுபோய் ஏஜென்சிக்காரன் காசோடை ஏமாத்திப் போட்டான். இப்ப கொழும்பிலைதான் நிக்கிறான்."
"உனக்கும் மாறிமாறிச் செலவுதான்" என்று

சனி, 12 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (3)

வெள்ளை வெளேர் என்று வெய்யிலில் தூய்மையைப் பிரதிபலிக்கும் வேட்டியுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் குழுமியிருந்தார்கள்.
சின்னஞ்சிறிசுகள் ஐஸ்பழ வான்களையும் கச்சான் கடலைக்காரிகளையும் சூழ்ந்து நின்று பெற்றோரிடம் பணம் கேட்டு அலறிப்புரண்டார்கள்.
ஆலயவாசலின் இருபுறமும் வட்டவடிவ வாயை நீட்டிக் கொண்டிருந்த ஒலிபரப்பிகளினூடாக சீர்காழி கோவிந்தராஜன் பக்திக் கானங்களை இசைத்துக் கொண்டி ருந்தார்.

"மனோ! அங்கை பார்...."
’ட்ராக்டர்’ வண்டிகளின் மேலாக அடுக்கிப் பிணைக்கப்பட்ட பனை மரங்களின் நுனியில் தொங்கிய சணல் கயிற்றின் மறுமுனையின் கொழுக்கிகளில் முதுகுத் தோலைக் குத்திக் கொழுவி கையில் பளபளக்கும் கூரிய வேலுடன் புன்னகைத்தவாறு ஊஞ்சலாடும் தூக்குக் காவடிக்காரர்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (2)

சுழிபுரம்!

குடிமனைகளும் வயல்வெளிகளும் கோவில்களும் நிறைந்த கிராமம். கூடவே வடபுறத்து எல்லையில் நீல நிறத்தில் வெண்ணிற அலைகளை முட்டி மோதவிட்டு வேடிக்கையாக ஆர்ப்பரிக்கும் பரந்து விரிந்த கடல் வலயம்.
அக்கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மனின் ஆலயம் மிகவும் பிரபல்யமானது. அவ் ஆலயத்தின் அருகில் வசிக்கும் ஒரு சிறு குழந்தையைக் கேட்டால்கூட, நமசிவாயகம் வீடு எது என்பதைச் சுட்டிக் காட்டிவிடும்.
நமசிவாயகம் மரவேலையில் மிகவும்

வியாழன், 10 டிசம்பர், 2015

தாலாட்டு - நினைவுத்துளி 03

ப்ப எல்லாம் வெளிநாடுகளில எங்கடை தமிழ் தாய்மார் தாலாட்டு பாடுறதே இல்லை எண்டுதான் நினைக்கிறன். அப்பிடி தாலாட்டு எண்டொரு சமாச்சாரம் இருக்கெண்டதே அவைக்குத் தெரியுமோ, தெரியாது.

இஞ்சை பிறக்கிற பிள்ளையள் தாங்களா விரும்பி தமிழை கதைக்கிறேல்லை எண்டு சொல்லீனம். அது ஞாயம்தான். பிறந்தோடனை தாலாட்டுக் கேட்டு வளந்த பிள்ளையள் தாங்களா விரும்பி தமிழ்ழை கதைக்கேலை எண்டு சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டன். ஏனெண்டால் தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டுமெண்டு சும்மா சொல்லி வைக்கேலை.

பிறந்த உடனை ரேடியோவிலையோ.. ரீவீலையோ சினிமாப் பாட்டைப் போட்டுவிட்டால்.. அதுகளுக்கும் தாங்களா தமிழ் சினிமா பாட்டையோ படத்தையோ.. கேக்குறத்துக்கோ பாக்குறத்துக்கோ வாற அக்கறை… தமிழ்ல கதைக்குறத்துக்கு வாறேல்லை…!

சில தாய்மார் சொல்லுவினம்.. எங்களுக்கு பாடத் தெரியாது..

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (1)

திகாலைப் பொழுது.

தொலைபேசி அலறியது.
இரவு வேலையால் வந்த அலுப்பு கண் இமைகளை அழுத்தி  எரிச்சலாக்கியது.
படுக்கையில் இருந்து எழ மனமில்லை.
தொலைபேசி விடாமல் அலறியது.
’யாராக இருக்கும் இந்த நேரத்தில்?!’
’நிம்மதியாகத் தூங்கக் கூட விடமாட்டாங்கள்!’
’சுள்’ளென்று கோபம் எட்டிப்பார்க்க, தொலைபேசியை நோக்கிக் கையை நீட்டினான்.
"ஹலோ! ஆர் சிவராசனே?"
"ஓமோம்.... நீங்கள் ஆர் கதைக்கிறியள்?"