புதன், 23 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (13)

திக்பிரமை பிடித்தவன்போல் நின்றான் சிவராசன்.
உறவென்ற ஆத்மாக்களின் மாற்றீடுகள் கைக்குக் கிட்ட வந்து எட்டச் செல்லும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
ஏன் விலகிக்கொள்ள ஆசைப்பட்டாய் அகல்யா? ஏன் வெறுத்துப் போனாய் இப்படி? வெட்டொன்று துண்டு இரண்டாய் என் உறவைத் தறித்துக்கொள்ள எப்படி முடிந்தது

செவ்வாய், 22 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (12)

சிவராசன் கூறியதைக் கேட்ட சிவசோதியின் மனம் கொதித்தது.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?
சும்மா கிடந்தவனை வலிய அழைத்து விருந்து கொடுத்து மனதை மாற்றி, அதில் ஆயிரமாயிரம் ஆசைகளை விதைத்துவிட்டு, திடீரென்று எப்படி இவர்களால் தூக்கி எறிய முடிந்தது?!
பாம்பு செட்டையைக் கழற்றிவிடுவதுபோல எப்படித்தான் இவர்களால் மனித உறவுகளை மாற்றியமைக்க முடிகிறது? மனச்சாட்சியை அடகுவைத்து ஆதாயம் தேடும் பச்சோந்திகள்.
எவ்வளவு ஆசையோடு வந்தான். எவ்வளவு கற்பனைகளைச் சுமந்து கொண்டு வந்தான். அத்தனையையும் கசக்கிப் பிழிந்து அவனைச் சக்கையாக எறிய அவர்களால் எப்படித்தான் முடிந்தது?!
காரின் பின் சீற்’றில் அவன் அகல்யாவுக்காக ஆசையோடு வாங்கிய சட்டை அனாதையாக அலங்கோலமாகக் கிடந்தது.

திங்கள், 21 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (11)

''அகல்யா வந்துவிட்டாள்!"
பவளம் ரெலிபோனில் கூறினாள்.
'என் அகல்யா வந்துவிட்டாள்!
சந்தோசத்தில் கூவவேண்டும் போலிருந்தது.
எண்ணாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருந்து எனக்காக, என் உறவுக்காக ஒரு உயிர் பறந்து வந்திருக்கின்றது.
'இதோ வந்துவிட்டேன் அகல்யா...! இனிமேல் என்னால் உன்னைக் காணாமல் இருக்க முடியாது. உன்னைக் காணாத கண்ணும்

சனி, 19 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (10)

ன்பின் சிவா!
உங்களுக்கு எதை எப்படி எழுதுவதென்றே தெரியவில்லை. ரெலிபோனில், ஏதாவது எழுதச் சொன்னீர்கள். நானும் எழுதுவதாகச் சொல்லிவிட்டேன்.
எழுத உட்கார்ந்தால் என்ன எழுதப் போகிறோம் என்பதே மறந்துவிடுகிறது. எழுதுவதற்கு முன்னால் எழுந்த கற்பனைகள், எண்ணங்கள் யாவும் பேனையைக் கையில் எடுத்ததும் வெறுமையாய் வெண்மையாய் மறைந்து போகின்றன. எனினும் எழுத வேண்டும்.
இல்லாவிட்டால் நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். என்னில் எரிச்சலாகக்கூட வரும்.
சிவா! கொழும்புக்கு வந்ததிலிருந்து மனது அமைதியற்ற கடலைப்போல் அலைபாய ஆரம்பித்துவிட்டது. முதன்முதலில் ரெலிபோனில் உங்களின் குரலைக் கேட்டவுடனேயே என் சுயசிந்தனைகள் யாவும் மட்டுப்பட்டுவிட்டன. மறுநாள் கதைத்தபோது

வெள்ளி, 18 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (9)

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளிலேயே தீர்மானிக்கிறார்கள்.
இது சாத்தியமா? முடியுமா?
எப்படி? எப்படி?
வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பெயர்.
வந்து பத்து வருடங்களுக்கு மேல். கையில் காசில்லை. வரவிற்கு மேல் செலவு. பலரிடம் கடன்.
சொன்னால் நம்பமாட்டார்கள். பொய் என்பார்கள்.
எல்லோரும் பிளேன் ரிக்கற்றுடனும் சில நூறு டொலர்களுடனும்தான் வந்தார்கள். சோசல் காசில்தான் வாழ ஆரம்பித்தார்கள். கார் வாங்கி ஓடுகிறார்கள். பவுண் பவுணாக வாங்கி

வியாழன், 17 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (8)

விண்ணை எட்டிப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் அந்த வீதியில் வரிசையாக நின்றன.
ஒரு கட்டிடத்தில் குறைந்தது ஐம்பது வீடுகளாவது இருக்கலாம். கையிலிருந்த விலாசச் சீட்டில் வீட்டிலக்கத்தைச் சரிபார்த்தான்.
நூற்றியொன்று.
வாசற்கதவில் வரிசையாகப் பொருத்திய பெயர்ப் பொத்தான்களில் பெயரைத் தேடினான்.

'சிவநேசன்.

புதன், 16 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (7)

''நான் போவிட்டு வாறன். லீவு கிடைச்சால் மறுபடியும் வாறன்" என்று சிவராசனிடம் விடைபெற்றான் சண்முகநாதன்.

பாபுவும் சண்முகநாதனும் காரில் ஏறி அமர்ந்தார்கள். பாபு காரைச் செலுத்த ஆரம்பித்தான்.

“என்ன சண்! திட்டமெல்லாம் வெற்றியாக்கும்.'
 மர்மச் சிரிப்புடன் கேட்டான் பாபு.
''வெற்றிதான் பாபு. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனானாம். அந்தக் கதைதான் இது."

செவ்வாய், 15 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (6)

டாக்டர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.
சோதனைக் குழாய்களில் இரத்தம் எடுத் தார்கள். எக்ஸ்ரேப் படங்களாக எடுத்துக் குவித்தார்கள். அவனைச் சுற்றிக் கூட்டம் கூட்டமாக நின்று பேசினார்கள்.
’ஏதோ சூட்டால் இரத்த வாந்தி எடுத்திருக்கலாம்!’ என்று நினைத்தவனுக்கு, மனதில் பயம் இலேசாக எட்டிப் பார்த்தது.
ஆஸ்பத்திரிக்கு வந்து இரண்டு வாரங்களாகிவிட்டன.

திங்கள், 14 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (5)

1989ம் ஆண்டு.
சிவராசன் ஜேர்மனிக்கு வந்து ஐந்து வருடங்கள் இருக்கும்.
சோசலில்தான் இருந்தான். களவாக ஒரு சீனா ரெஸ்ரோரண்டில் வேலை.
காலை ஐந்து மணித்தியாலம். பின்னர் மாலை ஐந்து மணித்தியாலம்.
கிழமையில் ஒரு நாள்தான் விடுமுறை.
பாவித்து அசுத்தமான உடைகளைத் தோய்த்து, அறையைச் சுத்தமாக்கி, சமைத்துச் சாப்பிட்டு

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (4)

''கேசவன்! கொழும்புக்கு ஒருக்கா ரெலிபோன் எடுக்க வேணும். அப்பா வந்து நிக்கிறார்."
"உன்ரை ரெலிபோனுக்கு என்ன நடந்தது? காசு கட்டேல்லையே?"
"இவன் தம்பியின்ரை அலுவலாய் கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் மாறிமாறிக் கதைச்சதிலை எக்கச்சக்கமாய் பில் ஏறீத்து."
"இப்ப தம்பி எங்கை? கனடாவுக்குப் போவிட்டாரோ?"
"எங்கை போனான்? கனடாவுக்கு அனுப்புறன் எண்டு சிங்கப்பூருக்குக் கூட்டிக் கொண்டுபோய் ஏஜென்சிக்காரன் காசோடை ஏமாத்திப் போட்டான். இப்ப கொழும்பிலைதான் நிக்கிறான்."
"உனக்கும் மாறிமாறிச் செலவுதான்" என்று

சனி, 12 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (3)

வெள்ளை வெளேர் என்று வெய்யிலில் தூய்மையைப் பிரதிபலிக்கும் வேட்டியுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் குழுமியிருந்தார்கள்.
சின்னஞ்சிறிசுகள் ஐஸ்பழ வான்களையும் கச்சான் கடலைக்காரிகளையும் சூழ்ந்து நின்று பெற்றோரிடம் பணம் கேட்டு அலறிப்புரண்டார்கள்.
ஆலயவாசலின் இருபுறமும் வட்டவடிவ வாயை நீட்டிக் கொண்டிருந்த ஒலிபரப்பிகளினூடாக சீர்காழி கோவிந்தராஜன் பக்திக் கானங்களை இசைத்துக் கொண்டி ருந்தார்.

"மனோ! அங்கை பார்...."
’ட்ராக்டர்’ வண்டிகளின் மேலாக அடுக்கிப் பிணைக்கப்பட்ட பனை மரங்களின் நுனியில் தொங்கிய சணல் கயிற்றின் மறுமுனையின் கொழுக்கிகளில் முதுகுத் தோலைக் குத்திக் கொழுவி கையில் பளபளக்கும் கூரிய வேலுடன் புன்னகைத்தவாறு ஊஞ்சலாடும் தூக்குக் காவடிக்காரர்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (2)

சுழிபுரம்!

குடிமனைகளும் வயல்வெளிகளும் கோவில்களும் நிறைந்த கிராமம். கூடவே வடபுறத்து எல்லையில் நீல நிறத்தில் வெண்ணிற அலைகளை முட்டி மோதவிட்டு வேடிக்கையாக ஆர்ப்பரிக்கும் பரந்து விரிந்த கடல் வலயம்.
அக்கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மனின் ஆலயம் மிகவும் பிரபல்யமானது. அவ் ஆலயத்தின் அருகில் வசிக்கும் ஒரு சிறு குழந்தையைக் கேட்டால்கூட, நமசிவாயகம் வீடு எது என்பதைச் சுட்டிக் காட்டிவிடும்.
நமசிவாயகம் மரவேலையில் மிகவும்

வியாழன், 10 டிசம்பர், 2015

தாலாட்டு - நினைவுத்துளி 03

ப்ப எல்லாம் வெளிநாடுகளில எங்கடை தமிழ் தாய்மார் தாலாட்டு பாடுறதே இல்லை எண்டுதான் நினைக்கிறன். அப்பிடி தாலாட்டு எண்டொரு சமாச்சாரம் இருக்கெண்டதே அவைக்குத் தெரியுமோ, தெரியாது.

இஞ்சை பிறக்கிற பிள்ளையள் தாங்களா விரும்பி தமிழை கதைக்கிறேல்லை எண்டு சொல்லீனம். அது ஞாயம்தான். பிறந்தோடனை தாலாட்டுக் கேட்டு வளந்த பிள்ளையள் தாங்களா விரும்பி தமிழ்ழை கதைக்கேலை எண்டு சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டன். ஏனெண்டால் தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டுமெண்டு சும்மா சொல்லி வைக்கேலை.

பிறந்த உடனை ரேடியோவிலையோ.. ரீவீலையோ சினிமாப் பாட்டைப் போட்டுவிட்டால்.. அதுகளுக்கும் தாங்களா தமிழ் சினிமா பாட்டையோ படத்தையோ.. கேக்குறத்துக்கோ பாக்குறத்துக்கோ வாற அக்கறை… தமிழ்ல கதைக்குறத்துக்கு வாறேல்லை…!

சில தாய்மார் சொல்லுவினம்.. எங்களுக்கு பாடத் தெரியாது..

கைக்கெட்டாத கைமாத்துக்கள் (1)

திகாலைப் பொழுது.

தொலைபேசி அலறியது.
இரவு வேலையால் வந்த அலுப்பு கண் இமைகளை அழுத்தி  எரிச்சலாக்கியது.
படுக்கையில் இருந்து எழ மனமில்லை.
தொலைபேசி விடாமல் அலறியது.
’யாராக இருக்கும் இந்த நேரத்தில்?!’
’நிம்மதியாகத் தூங்கக் கூட விடமாட்டாங்கள்!’
’சுள்’ளென்று கோபம் எட்டிப்பார்க்க, தொலைபேசியை நோக்கிக் கையை நீட்டினான்.
"ஹலோ! ஆர் சிவராசனே?"
"ஓமோம்.... நீங்கள் ஆர் கதைக்கிறியள்?"

புதன், 18 நவம்பர், 2015

நட்பு - நினைவுத்துளி 02

சில நினைவுகள் செத்தாலும் போகாதோண்ட மாதிரி மனசோடையே ஒட்டிக் கொண்டிருக்கும். அப்பிடித்தான் இதுவும்…
ஆறாம் வகுப்பெண்டு நினைக்கிறன்.. வேறை ஒரு பள்ளிக்கூடத்திலை இருந்து அங்க படிக்க வந்திருக்க வேணும்.. அதுவும் சரியா நினைவிலை இல்லாட்டிலும் நான் சொல்ல வாற முக்கியமான விசயம் நல்லா ஞாபகத்தில இருக்கு.
எங்கள் ரண்டு பேருக்கும் இடையில அப்பிடி ஒரு சினேகிதம்… பள்ளிக்கூடம் விட்டால் நான் அவன்ர வீட்டை போறது.. அவன் என்ர வீட்டை வாறது.. உரிமையோடை சாப்பிடுறது… எங்கள் ரண்டு பேற்றை அம்மாமாரும் அப்பிடித்தான்.. அப்பிடி ஒரு அன்பான உபசரிப்பு..

திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி

ங்கடை வீட்டிலை முந்தி ஒரு பழைய சிங்கர் மிசின் கிடந்தது.
முந்தி எண்டால்.. எழுபதுக்கு முந்தியாய்த்தான் இருக்க வேணும்.
ஏனெண்டால் கன விசயங்கள் ஞாபகத்திலை இல்லை எண்டாலும்.. நான் சொல்ல வாற விசயம் நடக்கேக்கை எனக்கு பத்து வயசும் ஆயிருக்கேலை எண்டதுமட்டும் நல்லாய் ஞாபகத்திலை இருக்கு.
இந்த சிங்கர் மிசின் எப்பிடி வந்ததெண்டு தெரியேலை.. ஆனால் எங்கடை வீட்டிலைதான் கிடந்தது. கீழ இருந்துதான் தைக்கிறது. அம்மா தனக்கு

வியாழன், 3 செப்டம்பர், 2015

பாதை தெரியாத பயணங்கள் (குறுநாவல்)

"என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. 

"ஆள் 'றெயினா'லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். 

சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். 

சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனியே அமைக்கப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் வசிப்பவன். ஜேர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி ஏறக்குறைய இரண்டு வருடங்களாவது இருக்கும். ஜேர்மன் மண்ணை மிதித்த முதல்நாள்....

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

யாகாவாராயினும் நாகாக்க!

வரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள். அவசரமென்று உதவி கேட்கும்போது அலட்சியத்துடன் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக வந்துபோகிறார்கள். ‘ஏதாவது உதவி தேவையா?’ என்ற பாவனையில் விசாரித்துச் செல்கிறார்கள்.

அவர்களது செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அரைகுறையாகவாவது அவதானிக்க முடிகிறது. வியப்பாக இருக்கிறது. அவர்களைப்பற்றி அவள் தனக்குள் போட்டுத் தீர்மானித்த முடிவுகள் யாவும் அங்கே தடுமாறி, அவர்களின் புதிய முகங்களைத் தரிசிக்க நேரும் விந்தைகள் யாவும் புதியனவாக இருக்கிறது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

அகத்தில் அரும்பிய ஆரூடம்

முடிவு ஆரம்பம், ஆரம்பம் முடிவு. ஆக்கம் அழிவு, அழிவு ஆக்கம். இரவு பகல், பகல் இரவு. ஒன்றின் எல்லையைத் தொட்டவாறு அதன் எதிர்மறையின் எல்லை. இந்த எல்லைகளின் விரிவும் சுருக்கமும் ஒரு உயிரினது சூழ்நிலையினது, மொத்தத்தில் உலகினது போக்கையே நிர்ணயிக்கின்றது. ஒவ்வொன்றின் முடிவும் தோற்றமும் வித்தியாசமானவை. அதேபோல் ஒன்றின் ஆக்கம் மற்றதின் ஆக்கத்தில் இருந்து வேறுபட்டது. அதேபோல் எல்லா இரவும் ஒரேமாதிரியானவையல்ல. பகலும் அவ்வாறே. அளவால் தன்மையால் வேறுபட்டவை. ஆனால் எல்லாம் ஆரம்பம்தான். முடிவுதான். ஆக்கம்தான் அழிவுதான். இரவுதான் பகல்தான்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

அதில் என்ன தவறு?!

வெள்ளைத்தோல்கள், பழுப்புத்தோல்கள், கறுப்புத்தோல்கள் எனப் பலதரப்பட்ட பன்னாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாகத் தாறுமாறாக- அவசர அவசரமாக வாகனங்களோடு வாகனங்களாக- இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அது பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம். 

முன்வாசலில் வலப்புறமாக நிரையாக டக்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இடத்துக்காக முன்நகர- அதை ஒட்டிய தொலைபேசிக் கூண்டுகளின் பக்கத்தில் நிரம்பி வழியும் சைக்கிள்கள்.

பியர் ரின்களுடன் தள்ளாடிவந்த இரண்டு செம்பட்டைப் பரட்டைத் தலைகள் முரட்டுச் சப்பாத்துக் கால்களால் முன்னால் நின்ற சைக்கிள்களில் ஒன்றை உதைத்து நெளித்து, தமது போதைக்குக் குறியீடு வைத்து நகர, சைக்கிள் உரிமையாளரின் வருகைக்காக அனாதையாய்க் கிடந்தது.

புதன், 22 ஜூலை, 2015

கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

ழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

வியாழன், 16 ஜூலை, 2015

ஆதியைத் தேடி ஆழியில் சயனம்!

(2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.)

து ஒரு ‘சொக்கலேற்’ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை.

பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக

வியாழன், 9 ஜூலை, 2015

சிறுதுளி

''அப்பா...!" என்று கூவியவாறு கையில் ஒரு கடதாசியுடன் ஓடிவந்தாள் சர்மிளா. 

பத்து வயது. என்னுடைய செல்ல மகள். இரண்டு பொடியங்களுக்குப் பிறகு பிறந்த பெட்டைப்பிள்ளை. அதனால் செல்லம் கொஞ்சம்கூட. பிள்ளைகளைத் தடியெடுத்து அதட்டினால் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் சுதந்திரத்திற்கு அவ்வளவு கட்டுப்பாடு கிடையாது.

அதுவும் சர்மிளாவுக்கு அறவே கிடையாது.

செவ்வாய், 7 ஜூலை, 2015

தனக்கென வேறு

மாலைநேரம். கீழ்வானத்துச் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் யன்னல் கண்ணாடிகளால் பொசிந்து தரையை அலங்கரித்த செங்கம்பள விரிப்பில் மஞ்சள் கோலமிட்டன.

தொலைக்காட்சியில் திருமணவிழா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாலனும் அவனது மனைவி பிள்ளைகளும். நண்பன் பாலனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் ஆறு அல்லது ஏழு வயதுக்குள்தான்.

கடை ஒன்றினுள் சந்தித்தான் பாலன்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

பெயர் ஒன்று வேண்டும்!

ருளம்பலம் அண்ணருக்கு மனதில் ஒரு பெரிய கவலை! ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் அவரது நீண்டநாள் ஆசையொன்று நிறைவேறாமலேயே இருக்கின்றது.

அந்த ஆசை....

‘பெவுக்னிஸ்’ விசாவுடன் ஸ்ரீலங்காவுக்குச் சுற்றுலாப்போய் வரவேண்டும் என்பதல்ல.
சோசல்காசில் இருந்து களவாக வேலைசெய்து வட்டிக்குக் கொடுத்துவரும் குட்டியால் தொந்தியை நிரப்பவேண்டும் என்பதும் அல்ல.

அப்படி என்னதான் ஆசை...?!

சனி, 4 ஜூலை, 2015

கூண்டுப்பறவை

கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். ­"லவ் பேர்ட்ஸ்". காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி.... மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக....

அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ?