செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 5

"போகணும்.."

"என்னடி நீ... வந்த உடனை போகணும் போகணும் என்று... வராமலே இருந்திருக்கலாம்.."

"சரி.. இனிமேல் வரலை.."

திங்கள், 29 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 4

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை.."

சுதா இப்படித்தான் சொன்னாள்.

பகிடிக்குச் சொல்லுகிறாளோ?

"ஏன்.. உனக்கு இப்ப எத்தினை வயது..?"

"இருபத்து மூன்று.."

"இருபத்து மூன்று வயதிலை வாழப் பிடிக்கேலையோ.. என்ன விளையாடுறியோ?"

உலகின் பல நாடுகளில் பஞ்சத்துக்குள்ளும் பிணிகளுக்குள்ளும் போராட்டங்களுக்குள்ளும் மனித உயிர்கள் வாழ்வதற்காக முயற்சித்தலையே வாழ்வாகக் கொண்டிருக்கும்போது... வளமான வசதியான நாடான கனடாவில் வசிப்பவளுக்கு இருபத்து மூன்று வயதில் வாழப் பிடிக்கவில்லை.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 3

வளேதான்... பிருந்தா..

வந்துவிட்டாள்.

'வருவாளா, வருவாளா' என்று கணணியின் முன்னால் காக்கவைத்து வந்துவிட்டாள்.

"ஜோ..!"

சனி, 27 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 2

ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள்தான்.

பதினைந்து வயதுவரை ஊர் வாழ்க்கை. அதனால், ஊரில் சந்திகளில்... குட்டையான மதில்களில் குந்தியிருந்து வம்பளக்கும் இளைஞர்களைக் கண்டிருக்கிறேன்.

வயல்வெளி நடுவே அமைந்துள்ள நன்னீர் கிணறுகளைச் சுற்றிநின்று அரட்டையடிக்கும் இளம் பெண்களையும் கண்டிருக்கிறேன்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 1

Monday, August 04, 2003
இது திங்கள்தோறும் அங்கம் அங்கமாக வளரப்போகும் தொடர்கதையாகும். இதைப் படிப்பவர்களது கருத்தையும் கவனத்திலெடுத்து கதை வளரும். இந்த தொடர்கதைக்கு அழகாக தலைப்புகள் அமைத்த அன்பிற்கினிய கரவை பரணி, இளைஞன் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது யாழ் இணையத்துக்காக மட்டுமே எழுத ஆரம்பித்திருக்கும் வாராந்த தொடர்கதையாகும். உள்ளே உங்களை அன்புடன் அழைப்பது இராஜன் முருகவேல்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

மாறவில்லை

ரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்று வயோதிபர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஊரின் பெயரையே சொல்லுவதாக இல்லை.

சும்மா ஒரு குறியீட்டுக்காக ஊர் அல்லது கிராமம் என்றே வைத்துக்கொள்ளுவோம். ஊர் அவ்வளவு பின்தங்கியும் இல்லை. அவ்வளவு முன்னேறியும் இல்லை- ஜேர்மனியில் பெண்விடுதலை என்று முழக்கமிடும் அநேகமான குடும்பப் பெண்களைப்போல.

பத்து வருட காலம்.

இந்த ஊரைவிட்டு ஜேர்மனிபோய், இப்போதுதான் மறுபடியும் இந்த ஊரை மிதிக்கவேண்டும் என்ற எனது எண்ணம் நனவாகியுள்ளது.

கடன்

மூன்று மாதங்களுக்குமேலாக ஊரிலிருந்து கடிதம் வரவில்லை. சனங்கள் என்னபாடுபடுகிறார்களோ தெரியவில்லை. காதுக்கு எட்டும் செய்திகள் பயமுறுத்தித் தினம்தினம் செத்துப் பிழைக்கவைக்கின்றன.

உண்மை எது பொய் எது என்று பகுத்தறிய முடியாத நிலை.

உறக்கம் வெகுநாளாய் மௌனமாகி இடையிடையே வந்து எட்டிப்பார்த்து வேடிக்கை காட்டுகிறது. பயங்கரமான கனவுகள் திகிலூட்டுகின்றன. உணவை நாட மனம் மறுத்தது. வேலை செய்யக்கூட முடியவில்லை.

வியாழன், 11 ஏப்ரல், 2013

யௌவனமில்லாத யதார்த்தங்கள்

னவுகளுடனும் கற்பனைகளுடனும், யாரிடமோ கடன் வாங்கி, ஜேர்மனியை மிதித்துச் சில காலம் சென்ற பின்புதான் தெரிகிறது- இங்கு வந்தது எவ்வளவு கேவலம் என்று.

'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பார்கள். சுதாகரைப் பொறுத்தவரையில் அந்த வார்த்தை முற்றிலும் உண்மையானது. ஜேர்மனியிலிருந்த நண்பர்கள் எழுதிய கடிதங்கள் அவனின் கற்பனையைத் தூண்டின.

‘மச்சான்! வெள்ளைக்காரிகளுடன் கைகோர்த்துத் திரியலாம். வேலை எதுவும் செய்யாமல் படுத்திருந்தே காசு சம்பாதிக்கலாம். உடுப்புக்கூட வாங்கத் தேவையில்லை. ஆறுமாதத்துக்கு ஒருமுறை உடுப்பு வாங்கக் காசு தருவாங்கள். ரீவி வாங்கலாம். எப்படியாலும் இங்கே வந்து சேர். சொர்க்கம் சொர்க்கம் என்பார்களே, அது ஜேர்மனிதான்.’

திங்கள், 1 ஏப்ரல், 2013

மனவிகாரங்கள்

குளிரைப் பார்த்துப் பதறியடித்து இலைகளை உதிர்த்துவிட்டுப் பட்டுப்போனவைகளைப்  போன்ற தோற்றத்துடன் வீதியின் இருமருங்கும் அமைதியாக நிற்கும் மரங்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் முண்டியடித்து முன்னேறும் வாகனங்கள், சோகத்துடன் குளிரைத் தாங்கும் மரங்களைத் தாண்டி ஆரவாரமாகச் சென்றுகொண்டிருந்தன. குளிரில் இருந்து உடம்பைப் பாதுகாக்கவென வாங்கியணிந்த உடைகளையும் மீறி நடுங்கியவாறு அருகிலிருந்த தேவாலய உச்சியில் தெரிந்த மணிக்கூட்டை அண்ணாந்து பார்த்தான் செந்தில்.

மணி சரியாக 4.50

மின்ரதம் (Electric Train) வர இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன.